search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் கொள்ளை"

    ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ரூ.11 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை விஸ்வநாதபுரத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 59). இவர் கே.கே.நகரில் ரியல் எஸ்டேட் நிறுவனம், கியாஸ் நிறுவனம் நடத்தி வருகிறார்.

    நேற்று முன்தினம் வழக்கம் போல் நிறுவனத்தை பூட்டிவிட்டுச் சென்று விட்டார்.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் அந்தப்பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. இதை பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த லாக்கரை உடைத்து மர்ம நபர்கள் அதில் இருந்த ரூ.11 லட்சத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பினர்.

    இன்று காலை கடையை திறக்க வந்த மாணிக்கம் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பணம் திருட்டு போயிருப்பது தெரியவந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை கொள்ளையடித்தவர்களை தேடி வருகின்றனர்.

    ×